திமுக முகவரை தாக்கிய அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்கு

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது திமுக முகவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-22 14:02 GMT

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது திமுக முகவரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை  நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவின்போது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில்  திருக்களாச்சேரி மேலத்தெருவை சேர்ந்த  சந்திரசேகர் (54) என்பவர் திமுகூட்டணியின் முகவராக பணியாற்றியுள்ளார். அப்போது அவர் திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த அதிமுக வேட்பாளர் பாபுவின் அப்பாவும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் கோபமாக சென்று திமுகவுக்கு ஆதரவாக எப்படி வாக்கு சேகரிக்கலாம் எனக் கேட்டு சந்திரசேகரை சட்டையை பிடித்து அடித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து ள்ளார். திமுக முகவர் சந்திரசேகர்  பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தாக்க முற்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மீது 171(f), 352, 506(1) 132 ஆகிய நான்கு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பவுன்ராஜ் மீது ஏற்கனவே ஒரு சில வழக்குகள் உள்ளதாகவும் இதுவரை அவர் ஜாமீன் பெற்றுக் கொள்ளவும் இல்லை கைது செய்யப்படவுமில்லை மயிலாடுதுறை போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News