பெண்ணை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு

கள்ளகுறிச்சி அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-20 09:07 GMT

கைது

கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி, 49; இவர், கடந்த 17ம் தேதி மாலை 4:00 மணியளவில் வீட்டின் வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த அருள், கனகராஜ், சின்னதுரை, சுரேஷ், மணிகண்டன் ஆகியோர், சாலையில் எதற்கு கோலம் போடுகிறாய் என கேட்டு, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், அருள் உட்பட 5 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News