கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

மனைவி கள்ளதொடர்பில் ஈடுபட்ட நிலையில் அதனை கேட்ட கணவனை தாக்கியதால் போலீசில் புகார். மனைவி மீது வழக்கு பதிவு.

Update: 2024-02-17 06:30 GMT

கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு

கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாரி மகன் சஞ்சீவ் காந்தி, 40; இவரது மனைவி சந்திரா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி இதுகுறித்து இளையராஜா, சந்திரா ஆகியோரிடம் கேட்டபோது, இருவரும் சேர்ந்து சஞ்சீவ் காந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் இளையராஜா, சந்திரா ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News