அரசு ஊழிரை தாக்கி பிரியாணி கடை மீது வழக்கு

மயிலாடுதுறை பிரியாணி கடையில் தகராறு குறித்து மயிலாடுதுறை போலீசார் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு

Update: 2024-06-01 11:41 GMT

வழக்கு பதிவு 

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிகவளாகத்தில் செயல்படும் பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்ற பெண் ஊழியரான சுகாதார ஆய்வாளர் பிருந்தா, நகர அமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜ் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பிருந்தா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது 294(b), 332, 506(i) பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Tags:    

Similar News