போடிநாயக்கனூரில் இரண்டு பெண்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் முன் விரோதத்தால் ஜாதிப்பெயர் சொல்லி திட்டிய பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Update: 2024-05-10 17:05 GMT

வழக்கு பதிவு 

தேனி மாவட்டம், போடி வினோபாஜி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் என்பவரை முன்விரோதம் காரணமாக இந்திராணி ,மல்லீஸ்வரி ஆகிய இருவரும் ஆபாசமாகவும் ஜாதி பெயர் சொல்லியும் திட்டி உள்ளனர். மேலும் ராஜம்மாள் வீட்டின் முன் இருந்த பூச்செடிகளை உடைத்துள்ளனர். இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இந்திராணி, மல்லீஸ்வரி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News