திமுக பகுத்தறிவு பிரிவு துணை பொருளாளர் மீது வழக்குப்பதிவு

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. பகுத்தறிவு பிரிவு துணை பொருளாளர் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-29 09:20 GMT

திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு 

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. பகுத்தறிவு பிரிவு துணை பொருளாளர் கதிரவன் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'மைக்' சின்னம் குறித்து ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளார். இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி காவல் ஆய்வாளர் சுந்தரேசன் ஆகியோர் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News