சங்கராபுரத்தில் 22 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிமீறிய 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 04:41 GMT
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்
சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி போக்குவரத்து விதிமீறிய 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் முகமது முஸ்தபா மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல், குடிபோதையில் ஓட்டியது என 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.