புளுதியூரில் கால்நடைகள் விற்பனை அமோகம்

புளுதியூர் வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Update: 2024-05-09 04:46 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறவது வழக்கம். மே 08 நேற்று நடைபெற்ற வார சந்தையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாய மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் 38 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News