ராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-04-14 14:22 GMT

வீரவணக்கம் செலுத்திய நிர்வாகிகள்

புரட்சியாளர், சட்ட மேதை டாக்டர் பீமாராவ் ராம்ஜி என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர், நகர வளர்ச்சி மன்ற தலைவர் வி.பாலு,

அவர்கள் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி வீர முழக்கம் கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வில் நிகழ்வில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன்,

திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொருளாளர் சலீம், நகர துணைசெயலாளர் கிருஷ்ண மூர்த்தி,

செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, பயாஸ்,வேம்பு திவிக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் ராமச்சந்திரன், 16 வது வார்டு திமுக இளைஞர் அணி கார்த்திக் , 6 வது வார்டு திமுக தங்கம் ,மற்றும் ராஜேஷ், சிரஞ்சீவி உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News