ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு

மோசூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் பணிபுரியும் பெண் ஊழியருடன் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 11:44 GMT

காவல்துறை விசாரணை


திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (45). இவர் அரக்கோணம் அருகே மோசூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஒப்பந்த அடிப்படையில் டிக்கெட் வழங்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் புவனேஸ்வரி வேலையில் இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி, புவனேஸ்வரி வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து புவனேஸ்வரி அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News