பழனியில் தடையை மீறி செல்போன் உபயோகம்
பழனியில் தடையை மீறி செல்போன் உபயோகம் செய்யபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-17 13:22 GMT
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த டிச.19ஆம் தேதி முதல் செல்போன், கேமரா மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி சில பக்தர்கள் தங்களது செல்போன்களை மலைக்கோயிலுக்கு எடுத்து சென்று புகைப்படம் எடுப்பது கண்டறியப்பட்டால், அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் வழங்கப்படுகிறது. என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.