மத்திய கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Update: 2024-01-24 08:14 GMT

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு நகரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமையான இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News