பாஜக சாா்பில் மத்திய அரசு நலத்திட்டப் பயனாளிகள் சந்திப்பு கூட்டம்

திருவையாறில் பாஜக சாா்பில் மத்திய அரசு நலத்திட்டப் பயனாளிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-05 07:53 GMT

பாஜக 

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாஜக சாா்பில் மத்திய அரசு நலத்திட்டப் பயனாளிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜீவா சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், பாஜக தேசியச் செயலரும், தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் பங்கேற்று மத்திய அரசு திட்டப் பயனாளிகளிடம் கலந்துரையாடினாா். இதில் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம், மாநில விவசாய அணி பொதுச் செயலா் பூண்டி எஸ். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா். மாவட்டத் தலைவா்கள் என். சதீஷ்குமாா் (வடக்கு), பி. ஜெய்சதீஷ் (தெற்கு), சட்டப்பேரவை தொகுதி பாா்வையாளா் வாசுதேவன், இணைச் செயலா் தங்க. கென்னடி, ஒன்றியத் தலைவா் விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், திருவையாறு கீழ வீதியில் பாஜக அலுவலகத்தை அரவிந்த்மேனன் திறந்து வைத்தாா்.
Tags:    

Similar News