செயின் பறித்த வழக்கு - ஒரு வருடத்துக்கு பின் வாலிபர் கைது

தக்கலையில் செயின் பறித்த வழக்கில் ஒரு வருடத்துக்கு பின் வாலிபர் கைது

Update: 2024-02-14 06:05 GMT

கைதான செய்யதலி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள நெல்லியார்கோணத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் மனைவி அஜிதா (27). கடந்த 2022 டிசம்பர் 29ஆம் தேதி பாலபள்ளியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த நபர்கள் இவர்  அடுத்து அணிந்திருந்த ஐந்தரை பவுன் செயினை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அதே நாளில் பிரம்மபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் தனது மனைவி ஸ்ரீகலா (50)  என்பவருடன்  பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,  பின்னால் வந்த மர்ம நபர்கள் ஸ்ரீகலா அணிந்திருந்த ஆறரைப்பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாகவும் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து  வந்தனர். இதனிடையே தக்கலை போலீசார் சாமியார் மடம் பகுதியில் நேற்று  வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரள மாநிலம் வடக்கேகரை பகுதி சேர்ந்த சையதுஅலி (24) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் செய்ததலி இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களிலும் தனது கூட்டாளி மாஹின் என்பவருடன் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் செய்யதலியிடம் இருந்து 12 பவுன் நகை மீட்டனர். கூட்டாளி மாஹின் கேரளாவில் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News