திரௌபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

மருத்துவக்குடி திரௌபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.

Update: 2024-05-21 00:50 GMT

கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்துள்ள மருத்துவக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாத ஆண்டு திருவிழாவின் போது, சுமார் 3 டன் எடை கொண்ட விசேஷ சக்கரமில்லா தூக்குத்தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக திருக்கோயில் வரை பவனி வந்த பிறகு, இன்று மாலை நடந்தேறிய தீமிதி திருவிழாவை முன்னிட்டி, ஆடுதுறை வீரசோழன் ஆற்றிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ சக்கரமில்லா தூக்கு தேரில் எழுந்தருளிய திரௌபதியம்மனை 200க்கும் மேற்பட்டோர் மாறி மாறி தங்களது தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக, கோயில் வரை பவனி வர, தேருக்கு முன்பாக , கேரள ஜெண்டை வாத்தியங்கள் முழங்க, 20க்கும் மேற்பட்ட நாதஸ்வர தவில் கலைஞர்களின் இன்னிசையுடன் அலகு காவடிகளுடன் தொடங்கியது,

இதனையடுத்து அம்மனை ஏராளமானோர் வீடுகள் தோறும் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர் தூக்கு தேர் பவனி வரும் பாதையில், ஆடுதுறை மேல மருத்துவக்குடி இடையே சாலையின் குறுக்காக செல்லும் ரயில்வே மின்வடத்தை கடக்க வேண்டியிருந்ததால் தூக்கு தேர் அந்த இடத்தில் கடக்கும் நேரத்தில், கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கம் சுமார் அரை மணி நேரமும், மற்றும் ஆடுதுறை பகுதி முழுவதும் இன்று பிற்பகல் முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது தொடர்ந்து தூக்கு தேர் கோயிலை சென்றடைந்த பிறகு, அங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து அம்மனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது

இத்தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது

Tags:    

Similar News