தெருநாய்கள் கடித்து குதறியதில் பலியான
பட்டியில் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து அதிர்ந்த முதியவர்கள்;
Update: 2024-03-19 15:38 GMT
வேடந்தாங்கல் அருகே உள்ள நெல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் 20 ஆடுகளையும், எத்திராஜ் என்பவர் 30 செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இருவரும் மேய்ச்சல் முடிந்து, இரவு வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதற்காக வந்த போது, 20 ஆடுகள் இறந்து கிடந்தன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள், கடிபட்ட காயத்துடன் நடக்க முடியாமல் இருந்தன. நெல்வாய் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளை பரிசோதித்தனர்.
விசாரணையில் இரவு நேரத்தில் கொட்டகைக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை கழுத்து குதறியது தெரியவந்துள்ளது.