சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சியில் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான மேயர் அறிவிப்புகள் குறித்த அதிகாரிகள் கலந்தாலோசனை கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.

Update: 2024-02-02 06:01 GMT

ஆலோசனை கூட்டம் 

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான மேயர் அறிவிப்புகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மேயர் பிரியா  தலைமையில் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், (சுகாதாரம்), ஆர்.லலிதா, (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், (தெற்கு), பிரவீன் குமார், (மத்தியம்), கட்டா ரவி தேஜா,(வடக்கு), தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News