வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை முதன்மைச் செயலாளர் ஆய்வு
வெண்ணாம்பட்டியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-05-04 02:40 GMT
வெண்ணாம்பட்டியில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் வெண்ணம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., கூடுதல் இயக்குநர் (வீடுகள்) ராஜஸ்ரீ கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் எஸ்.பால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆறுமுகம், லோகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்உடனிருந்தனர்.