பிரான்மலையில் சித்திரை திருவிழா துவக்கம்

பிரான்மலையில் சித்திரை திருவிழா துவக்கம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2024-04-15 06:13 GMT

 சித்திரைத் திருவிழா

பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடியேற்றினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். விழாவின் 5ம் நாளான ஏப்.17ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும் அன்று இரவு 9:00 மணிக்கு சமணர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. ஏப். 19ம் தேதி வள்ளல் பாரி விழா ஆராதனையும், ஏப்.20ம் தேதி கூத்தபெருமானுக்கு திருமுழுக்காட்டும் நடக்கிறது. ஏப்.21ம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 22ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News