நெமிலி அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா

நெமிலி அருகே மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2024-05-06 16:10 GMT

சாமி ஊர்வலம்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதத்திருவிழா நடைபெற்றது. முன்னதாக காலையில் அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், வாசனை திரவியங்கள் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு பக்தர்கள் அனைவரும் விரதமிருந்து கூழ்வார்த்தனர்.

தொடர்ந்து இரவு அம்மன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கையுடன், இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News