வள்ளியூரில் தவக்கால தவப்பணி மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் !
வள்ளியூர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு தவக்கால தவப்பவனி இன்று (மார்ச் 16) மேற்கொண்டனர்.
Update: 2024-03-16 06:27 GMT
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து வள்ளியூரில் இருந்து தெற்குகள்ளிகுளம் மலைக்கு தவக்கால தவப்பவனி இன்று (மார்ச் 16) மேற்கொண்டனர். வள்ளியூர் புனித பாத்திமா திருத்தலத்தில் இருந்து இந்த தவப்பவனி தொடங்கியது. இதில் அருள்தந்தை சத்தியநேசன், பங்குத்தந்தைகள் வள்ளியூர் ஜாண்சன், தெற்குகள்ளிகுளம் ஜெரால்டு ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.