ராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

ராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 12:47 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் குழந்தை ஏசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று சிறப்பு பிரார்த்தனைகளுடன் பங்குத்தந்தை ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் ஒன்றிணைந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இயேசு கிறிஸ்து பிறந்ததை குறிக்கும் வகையில் எசு கிறிஸ்து மரம் வண்ண விளக்குகளால் மெருகேற்றப்பட்டிருந்தது. அதேபோல் இயேசு கிறிஸ்து பிறந்த குடில் அமைத்து அதில் தத்துருவமாக இயேசு கிறிஸ்து பிறந்ததை வடிவமைத்து அழகுப்படுத்தினர்.

மாதா,சூசை ,ஏசு , வான தூதர்கள் என இயேசு கிறிஸ்து குடில் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. சிறப்பு பிரார்த்தனையானது பங்குத்தந்தை அருட்பணி ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் நள்ளிரவு முழுவதும் சிறப்பு பிராத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலய பங்கு பேரவை மற்றும் இறைமக்கள் முக்கிய நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News