கிறிஸ்துமஸ் பண்டிகை: முன்னிட்டு உதகை தேவாலங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உதகையில் உள்ள தேவாலங்களில் சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது.

Update: 2023-12-25 09:24 GMT

சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்த்து பிறப்பை வெகுவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் உலகை மீட்க வந்த ரட்சகர் இயேசு கிறுஸ்த்து பிறக்கபோகிறார் என்ற மகிழ்ச்சியான நற்செய்தியை திருப்பிலியாக நிறைவேற்றி கிறிஸ்தவர்ள் கொண்டாடினர்.

இதன் ஒரு கட்டமாக நீலகிரி உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மைசூர் மறை மாவட்ட ஆயர் வில்லியம் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News