திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்

Update: 2023-12-25 03:04 GMT
கிறிஸ்துமஸ் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் அரிமா வேல்முருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் அருள்மொழி வரவேற்றார். ஆங்கில ஆசிரியை ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் அரிமா பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் ஆசிரியை திவ்யா மற்றும் மாணவர் கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடி இனிப்பு வழங்கினர். தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News