கிறிஸ்துமஸ் பண்டிகை : பண்ருட்டி எம்எல்ஏ வாழ்த்து

கிருஸ்துமஸ் பண்டிகை ஓட்டி பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-25 09:46 GMT

வேல்முருகன் எம்எல்ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,அன்பு, கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசுபிரான் பிறந்த தினமான இன்று, கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து, வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டு, விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் அன்பு, கருணை, ஆனந்தம் ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பியவர் ஏசுபிரான். மனிதர்களிடத்தில் மட்டுமின்றி மற்ற உயிர்களிடத்திலும் பாசத்தையும், கருணையையும் வெளிப்படுத்தியவர் அவர்.

இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News