திருக்கோவிலூரில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

திருக்கோவிலுார் நல்லாயன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2023-12-26 07:12 GMT

சிறப்பு பிரார்த்தனை 

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருக்கோவிலுார் நல்லாயன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு பங்கு தந்தைகள் கிளிட்டஸ்ரெக்ஸ், அலெக்ஸ் தலைமையில் ஆராதனை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு பிறப்பு நிகழ்வுகளுடன் நடத்திக் காண்பிக்கப்பட்டது. இயேசு பிறப்பு பெருவிழா பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு திருப்பலி ஆராதனை நடந்தது. ஆசிரியர் பால்ஆரோக்கியராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News