தேவாலயத்திற்கு சென்ற பெண் திடீரென மாயம்: காவல் நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு சென்ற பெண் திடீரென மாயமானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 09:03 GMT
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி 59 வயதான பாத்திமாமேரி. இவர் கடந்த 1 ம் தேதி வீட்டிலிருந்து பாலக்கரையில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
திடீரென மாயமானார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பாத்திமாமேரியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் பாத்திமா மேரியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான பாத்திமாமேரி தீவிரமாக தேடி வருகின்றனர்.