கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-05-10 09:20 GMT

மக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கர்ப்பிணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால், கழிவறையை பயன்படுத்த முடியாமல் கர்ப்பிணிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுனால், ஆத்திரமடைந்த கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள்நேற்று இரவு 10.15 மணி அளவில் அரசு மருத்துவமனை முன் கச்சிராயப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று இரவு 10:25 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரப்பு நிலவியது.

Tags:    

Similar News