நகராட்சி நடுநிலைப் பள்ளியை நகர மன்ற தலைவர் திடீர் ஆய்வு
திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 10:38 GMT
நகர மன்ற தலைவர் ஆய்வு
நகர மன்ற தலைவர் ஆய்வு
திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு உணவுகள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறதா சத்துணவு மைய பொறுப்பாளர்கள் சரியான நேரத்திற்கு வருகை தருகிறார்களா என திடீர் ஆய்வு செய்தார் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் படவேண்டிய உணவு வகைகள் தரமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை மாலதி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் மைதிலி காந்தி மற்றும் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் ஆசிரியர் குழுவினர் உடன் இருந்தனர்.