சேலத்தில் மாட்டிறைச்சி கடையில் இருதரப்பினர் மோதல்

சேலத்தில் மாட்டிறைச்சி கடையில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.

Update: 2024-04-29 16:21 GMT

கோப்பு படம் 

சேலம் டவுன் முகமதுபுறா பகுதியைச் சேர்ந்தவர் பாஷா மகன் அலாவுதீன் (30). இதே பகுதியைச்சேர்ந்தவர் பைரோஸ். இவர்கள் இருவரும் மாட்டிறைச்சி கடைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் கருவாட்டுப்பாலம் பகுதியில் உள்ள கடைக்கு மாட்டு எலும்புகளை விற்க எடுத்துச்சென்றனர். அப்போது யார் கொண்டு வந்த எலும்புகளை முதலில் எடைபோடுவது என்பதில் தகராறு ஏற்பட்டு பைரோசை அலாவுதீன் தாக்கி உள்ளார். இந்நிலையில் அங்கிருந்து சென்ற பைரோஸ், சிறிது நேரத்தில் 4 பேருடன் வந்து தகராறு செய்து அலாவுதீனை தாக்கி உள்ளார்.

இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய அவர் அளித்த புகாரின் பேரில் டவுன் எஸ்ஐ மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் பைரோஸ் அளித்த புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News