குமாரபாளையத்தில் மாடு முட்டியதில் இரு தரப்பினரிடையேடையே மோதல்

குமாரபாளையத்தில் மாடு முட்டியதில் இரு தரப்பினரிடையேடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2024-01-30 11:22 GMT

படுகாயமைந்தவர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாடு முட்டியதால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் செய்யப்பட்டது. சேலம் இரும்பாலை மூன்றாவது கேட் பகுதியை சேர்ந்தவர் சபரிராஜா, 27. இவர் குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தனது காளையை பங்கேற்க வைப்பதற்காக வந்திருந்தார்.

தனது மாடு அளவில் பெரிதாக இருந்ததால், மாடுகள் செல்லும் கிட்டி வழியாக இவரது மாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வரிசையின் முன்னால் சென்று காத்திருந்தார். அப்போது அருகில் இருந்த சில, இவரது காளையை சீண்டி விட, ரெட்டிபட்டி ராஜா என்பவரை மாடு முட்டியது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா ஆதரவாளர்கள், சபரிராஜாவை, ரெட்டிபட்டி ராஜா ஆதரவாளர்கள் கைகளால் தாக்கியதுடன், கல் எடுத்து, தலையில் தாக்கியதில், சபரிராஜா, பலத்த காயமடைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சபரிராஜா கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News