வானூர் அருகே 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

வானூர் அருகே 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுனர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-29 11:36 GMT

கைதான ஓட்டுநர்

புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியை சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளி விடுமுறை என்பதால் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில் தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று சிறுமி வீட்டு அருகே வெளியில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுனர் தண்ணீர் கேட்பதுபோல் கேட்டு அச்சிறுமியை தூக்கிகொண்டு லாரிக்குல் சென்றுள்ளார் உடனே சிறுமி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் சிறுமியின் கூச்சல் சத்தம் கேட்டு லாரிக்குள் சென்று பார்த்தபோது ஓட்டுநர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

உடனே காவல்துறைக்கு தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோட்டக் குப்பம் அனைத்தும் மகளிர் காவல் நிலைய காவலர்கள் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த புதுச்சேரி மாநிலம் சுத்துகேணி பகுதியை சார்ந்த முருகன் வயது 33 பொக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News