அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
Update: 2024-02-07 07:23 GMT
திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தனியார் கல்லூரி தேசிய மாணவர் படையினர் ஆகியோர் இணைந்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் கிழக்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.