பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு !!

கால்வாயில் மண்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-05-23 09:33 GMT

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு 

காஞ்சிபுரம் மாநகராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு ஆனந்த விநாயகர் கோவில் தெருவில், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, ஆனந்த விநாயகர் கோவில் தெருவில் உள்ள கால்வாயில் மண்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

Tags:    

Similar News