தேங்காய் பருப்பு ஏலம்

சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு 102615.27ரூபாய்க்கு ஏலம் போனது.

Update: 2024-03-01 08:59 GMT

தேங்காய் பருப்பு ஏலம்

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 16 விவசாயிகள் 41 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 615ரூபாய் 27 காசுகளுக்கு ஏலம் போனது.

இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 83 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 53 ரூபாய்க்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 76 காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 5வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags:    

Similar News