ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 67மூட்டைகள் தேங்காய் பருப்பு 232621.01 பைசாவிற்கு ஏலம் போனது.;

Update: 2024-05-23 16:45 GMT
ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

ஏலத்திற்கு வந்த தேங்காய் பருப்புகள்

  • whatsapp icon

சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த 2நாட்களாக 16விவசாயிகள் 67மூட்டைகளில் 27.50குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது.

இதில் மொத்தம் 2லட்சத்து 32ஆயிரத்து 621ரூபாய் 01காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 90ரூபாய் 99காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 65ரூபாய் 55காசுக்கும், சராசரி விலையாக 89ரூபாய் 99காசுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது எனவும்,

அப்படி நிர்ணயம் செய்த தேங்காய் பருப்புகளை 4வியாபாரிகள் வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News