ஓமலூரில் ரூ.5.15 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.15 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

Update: 2023-12-29 05:59 GMT

தேங்காய் பருப்பு 

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 17 விவசாயிகள் 147 மூட்டைகளில் 68.44குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 5லட்சத்து 15ஆயிரத்து 877ரூபாய் 30காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 86ரூபாய் 39காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 60ரூபாய் 79காசுக்கும், சராசரி விலையாக 82ரூபாய் 89காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 6வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.
Tags:    

Similar News