தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு 1,97,236 ரூபாய்க்கு ஏலம் போனது

Update: 2024-04-26 05:58 GMT

பைல் படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று  தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர் தேங்காய்பருப்பு மூட்டை: 47 எடை:23.53 குவிண்டால் மதிப்பு: 1,97,236/- கிலோ அதிகவிலை:91.70 குறைந்தவிலை:82.00 சராசரிவிலை:84.85 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்
Tags:    

Similar News