காபி வித் கலெக்டர் : மாணவர்கள் கலந்துரையாடல்
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 59 ஆவது கலந்துரையாடலில் அரசு பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்.;
Update: 2024-01-19 03:27 GMT
ஆட்சியருடன் மாணவர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இந்த 58-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 30 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 59-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.