பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

நன்னிலத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடி டிப்ஸ்களை வழங்கினார்.

Update: 2024-01-18 14:45 GMT

  நன்னிலத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்துரையாடி டிப்ஸ்களை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கலந்துரையாடினார். மேலும் மாணவர்களுக்கு தெரிவித்ததாவது,மேற்படிப்பிற்கு பொது தேர்வில் எடுக்கவும் மதிப்பெண்களே அடிப்படையாக அமையும். பொதுத்தேர்விற்கு இரண்டு மாத காலம் உள்ளது. இக்காலத்தினை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு பொதுத்தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சியர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News