அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான‌ ஏற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம்,சிங்கிரிகுடி பகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-09 14:24 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கிரிகுடி பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் இல்லத்திலேயே அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உள்ளார்.
Tags:    

Similar News