மக்களுடன் முதல்வர் முகாமில் கலெக்டர் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-12-24 02:52 GMT

ஆட்சியர் ஆய்வு 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்  உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார், முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா மனுக்கள் முறைப்படி பெறப்படுகின்றதா மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News