தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-10 09:56 GMT
ஆய்வு மேற்கொண்ட போது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கே எம் சரயு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் குமார் வட்டாட்சியர் திருமால் வட்டார வளர்ச்சி அலுவலர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் அம்பிகாபதி உடன் இருந்தனர்.

Tags:    

Similar News