மின்னணு வாக்கு சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகாசியில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-10 15:47 GMT
சிவகாசியில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மக்களவை பொதுத்தேர்தல் 2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு 27 இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளுக்கு மொத்தம் 4066 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit) அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (Ballot Unit) வேட்பாளர் பெயர்,சின்னம் மற்றும் புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 205-சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 666 வாக்குப்பதிவு இயந்திரங்களில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வேட்பாளர் பெயர்,சின்னம்,பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணி நடைபெற்றதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., நேரில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News