வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையினை கலெக்டர் ஆய்வு.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-16 15:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் காலாண்டு ஆய்விற்காக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் டிம்பர் 15ம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து ஆட்சியர் தெரிவித்த போது, நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு, ”பயிற்சி மற்றும் விழிப்புணர்வூட்டல்” என்ற பணிகளுக்காக வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த கட்சியின் சின்னத்தினை உறுதிப்படுத்தும் வாக்குபதிவு கருவியின் செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 59 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் , 59 வாக்களிக்கும் இயந்திரங்கள் மற்றும் 59 V VPAT கருவிகள் என ஆக மொத்தம் 177 இயந்திங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு Training and Awareness என்ற மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காப்பறையில் வைக்கப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த செயல்விளக்க மையங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இயங்கும். எனவும் பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வினை பெற்றுப் பயனடைய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, வட்டாட்சியர் அருளானந்தம் குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News