வாக்கினை உறுதி செய்யும் கருவியை ஆட்சியர் ஆய்வு !
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கினை உறுதி செய்யும் கருவி-ஆய்வு செய்த தேர்தல் பொது பார்வையாளர், ஆட்சித்தலைவர் கே. எம். சரயு முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-28 10:07 GMT
ஆய்வு
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், வாக்காளர் தன் வாக்கினை உறுதி செய்யும் கருவி (வி. வி. பேட் இயந்திரம்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர், கிரண் குமாரி பாசி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் கே. எம். சரயு முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் உள்ளார்.