கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியம் அருகே கிடாரத்தில் முதல் கால பருவ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-04-03 09:58 GMT

தற்கொலை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே கிடாரம் குடித்தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் 18 வயதான சன்சுதன். இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இசிஇ படித்து வருகிறார். இந்நிலையில் முதல் காலப்பருவத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவர் சன்சுதன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என கூறினார். இது குறித்து அவரது தந்தை காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News