கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2024-03-10 06:55 GMT
தற்கொலை 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள சேதுக்கு வாய்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் சுடலையாண்டி. இவரது மகன் பட்டுராஜ் (18), சென்னையில் உள்ள கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 24ஆம தேதி கோவையில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட பட்டுராஜ் தோல்வி அடைந்து விட்டாராம்.

இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்த அவர், அங்கு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஷீதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News