கொமதேக சார்பில் நாமக்கல்லில் கோவை செழியன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் கோவை செழியன் திருவுருவ புகைப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

Update: 2024-03-15 17:22 GMT

நினைவு தினம் அனுசரிப்பு 

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனருமான கோவை செழியனின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல் அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மேலும், மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளா் ஆா்எஸ்ஆா்.மணி, வா்த்தக அணி செயலாளா் குரு இளங்கோ, இணை செயலாளா் செந்தில்ராஜா மற்றும் கட்சி நிா்வாகிகள், மகளிா் அணியினா் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News