தக்கலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

தக்கலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-05 10:54 GMT
ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவிப்பு.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக(ஓ பிஎஸ் அணி)  சார்பில் தக்கலை பேருந்து நிலையம் சமீபத்தில் , தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் பி. டி. செல்லப்பன் மாலை அணிவித்தார்.   

நிகழ்வில் மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் வீரவேணாடன்ராஜா,  பத்மநாபபுரம்  நகரக் செயலாளர் டேனியல்,  மாவட்ட அமைத்தலைவர் சந்திரசேகர் , முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கமணி,  மாவட்ட இணை செயலாளர் சரளா ஏசுதாஸ்,  மாவட்ட பொருளாளர் பில்மோர் ராபர்ட், மாவட்ட துணைச் செயலாளர் உஷா, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News